Thursday 2nd of May 2024 11:56:14 PM GMT

LANGUAGE - TAMIL
பொதுத் தேர்தலில் புதிய கூட்டணியில் போட்டிடவுள்ளதாக அறிவித்தார் சஜித்!

பொதுத் தேர்தலில் புதிய கூட்டணியில் போட்டிடவுள்ளதாக அறிவித்தார் சஜித்!


புதிய கூட்டணியிலேயே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.

கொழும்பில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசிய சஜித் இதனைத் தெரிவித்தார்.

கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு அவற்றைச் சரிசெய்து புதிய கூட்டணி முன்னேறும் எனவும் அவர் கூறினார்.

புதிய கூட்டணியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்த சஜித் பிரேமதாச, எந்தவொரு முடிவையும் எடுக்க யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றார்.

கடந்த காலங்களில் தனக்கு எதிராக செயல்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதிய கூட்டணி ஜனநாயகத்தை பேணுவதுடன், வெளிப்படையாகவும் இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE